தேசியம்
செய்திகள்

விமர்சனத்துக்கு உள்ளாகும் முதற்குடி பெண்களின் எச்சங்களை தேடமறுக்கும் Manitoba அரசின் முடிவு

கொல்லப்பட்டதாக நம்பப்படும் இரண்டு முதற்குடி பெண்களின் எச்சங்களை தேடமறுக்கும் Manitoba மாகாண அரசாங்கத்தின் முடிவு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த பெண்களின் எச்சங்கள் Winnipegகிற்கு வடக்கே உள்ள நிலப்பகுதியில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Morgan Harris, Marcedes Myran ஆகிய பெண்களின் எச்சங்கள் தனியார் வசமுள்ள நிலப்பகுதியில் இருக்கலாம் என காவல்துறையினர் நம்புகின்றனர் .

ஆனாலும் அவர்களின் எச்சங்களை தேடும் நடவடிக்கைக்கு மாகாண அரசாங்கம் ஆதரவு வழங்காது என Manitoba முதல்வர் Heather Stefanson கடந்த வாரம் கூறினார்.

இந்த முடிவை சுதேசி உறவுகள் அமைச்சர் Marc Miller விமர்சித்தார்.

மாகாண அரசின் நிலைப்பாடு தேடுதலை சாத்தியமற்ற தாக்குகிறது என அமைச்சர் கூறினார் .

Related posts

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை திறக்கும் கனடா

முதலாவது தடுப்பூசியை பெற்றவர்களின் 1.3 சதவீதமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Gaya Raja

மீண்டும் ஆரம்பிக்கும் Ontario சட்டமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment