தேசியம்
செய்திகள்

சூடானில் இருந்து கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறும் சந்தர்ப்பம் குறைகிறது

சூடானில் இருந்து கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறும் சந்தர்ப்பம் குறைந்து வருவதாக கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கனேடிய கூட்டு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி வெள்ளிக்கிழமை (28) இந்த தகவலை வெளியிட்டார்.

வெள்ளி காலை சூடானிலிருந்து பயணித்த துருக்கி விமானம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் துருக்கி பணியாளர் ஒருவர் காயமடைந்ததாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளியன்று அங்கிருந்து பயணிக்க இருந்த ஒரு கனடிய விமான பயணம் இரத்து செய்யப்பட்டது.

அதேவேளை இயந்திரக் கோளாறு காரணமாக அங்கிருந்து பயணிக்க இருந்த இரண்டாவது கனடிய விமான பயணம் இரத்து செய்யப்பட்டது.

சூடானில் இருந்து வெளியேற உதவி கோரிய கனடியர்களை அழைத்து வருவதற்கு போதுமான விமானங்கள் அடுத்த சில தினங்களில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 300 கனேடியர்கள் ஏற்கனவே சூடானில் இருந்து பாதுகாப்பான மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Related posts

மூலதன ஆதாய திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் எதிர்கட்சி

Lankathas Pathmanathan

கனடாவில் நால்வர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் மூன்றாவது நபர் இந்தியாவில் கைது

Lankathas Pathmanathan

போலந்தில் ஆளில்லா விமானங்கள் மூலமான தாக்குதலுக்கு ரஷ்யாவுக்கு எதிராக கனடா கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment