தேசியம்
செய்திகள்

200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பப்படுகின்றனர்

கனடிய அரசாங்கம் 200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பவுள்ளது.

சூடானில் உள்ள கனடியர்கள் வெளியேறுவதற்கு உதவ இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (26) இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

கனடியர்கள் வெளியேறுவதற்கு இரண்டு விமானங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

பொதுமக்களை வெளியேற்ற பாதுகாப்பான தருணத்திற்காக அவர்கள் காத்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

NATO பயிற்சியில் ஆயிரம் கனடிய ஆயுதப் படையினர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment