தேசியம்
செய்திகள்

Markham நகரின் ஏழாவது வட்டார வேட்பாளர் ஜுவானிடா நாதனின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஜுவானிடா நாதன் தனது தேர்தல் பிரச்சாரத்தை திங்கட்கிழமை (06) ஆரம்பித்தார்.

York பிராந்திய கல்வி சபை உறுப்பினர் ஜுவானிடா நாதன் இம்முறை Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.

இவரது பிரச்சார ஆரம்ப நிகழ்வில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பல சமூக, கல்விசார் பதவிகளில் பெற்ற அறிவு, நிர்வாகத்துறை சார்ந்த விசேட அனுபவம் என்பன ஜுவானிடா நாதனை இந்தத் தேர்தலில் தகுதியான வேட்பாளராக களமிறக்க காரணமாகின்றன என அங்கு உரையாற்றியவர்கள் தெரிவித்தனர்.

Related posts

சட்டவிரோத துப்பாக்கிகள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயார்: பிரதமர்

Lankathas Pathmanathan

அதிகரிக்கும் இளையோர் வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

Leave a Comment