தேசியம்
செய்திகள்

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணை?

கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த தேசிய பொது விசாரணைக்கு இரண்டு பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இந்த விசாரணையை பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி முதலில் கோரியிருந்தது.

இந்த விடையத்தில் தனது கட்சி ஒரு சுயாதீனமான, பொது விசாரணையை எப்போதும் ஆதரிக்கும் என Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்.

இந்த நிலையில் புதிய ஜனநாயகக் கட்சி புதன்கிழமை (01) இந்த விசாரணையை வலியுறுத்துகின்றது.

இந்த விசாரணையை கோரும் Conservative பிரேரணைக்கு NDP ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சுயாதீனமான மதிப்பீடு குறித்து Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கம் தொடர் அழுத்தங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரும், பிரதி அமைச்சரும் தமிழர்கள்!

Lankathas Pathmanathan

எட்டப்பட்டது ஒப்பந்தம் – தவிர்க்கப்பட்டது CUPE வேலை நிறுத்தம்!

Lankathas Pathmanathan

கனடிய இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து ஆச்சரியமளிக்கவில்லை: கனடிய மத்திய அரசு

Lankathas Pathmanathan

Leave a Comment