September 4, 2026
தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவான ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற கனடிய பிரதமர்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டிய விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் Justin Trudeau பங்கேற்றார்.

உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (24) கனடாவின் பல பகுதிகளில் நடைபெற்றன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையிலும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

Torontoவில் வெள்ளிக்கிழமை மாலை மாபெரும் ஒற்றுமை பேரணி ஒன்று நடைபெற்றது.

இந்தப் பேரணியில் பிரதமர் Justin Trudeau தவிர, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், Conservative தலைவர் Pierre Poilievre, Ontario பிரதமர் Doug Ford உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

Air கனடா தலைமை நிர்வாக அதிகாரி விரைவில் ஓய்வு?

Lankathas Pathmanathan

வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க கோரி கடிதம் எழுதிய கனடா?

Lankathas Pathmanathan

கனடாவில் அனைத்து செய்திகளையும் அடுத்த சில வாரங்களுக்குள் அகற்ற Meta முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment