தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவான ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற கனடிய பிரதமர்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டிய விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் Justin Trudeau பங்கேற்றார்.

உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (24) கனடாவின் பல பகுதிகளில் நடைபெற்றன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையிலும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

Torontoவில் வெள்ளிக்கிழமை மாலை மாபெரும் ஒற்றுமை பேரணி ஒன்று நடைபெற்றது.

இந்தப் பேரணியில் பிரதமர் Justin Trudeau தவிர, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், Conservative தலைவர் Pierre Poilievre, Ontario பிரதமர் Doug Ford உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

இரண்டு தொகுதிகளில் 40-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Lankathas Pathmanathan

மீண்டும் ஐரோப்பா பயணமாகும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

Science Centre மூடப்படுவதை எதிர்க்கும் பேரணி!

Lankathas Pathmanathan

Leave a Comment