தேசியம்
செய்திகள்

ArriveCAN செயலி தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட பிரதமர்

ArriveCAN செயலியின் பயன்பாட்டு மேம்பாட்டை ஒப்பந்தம் செய்வதற்கான முடிவு தர்க்கமற்றது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

ArriveCAN செயலி தொடர்பான கொள்முதல் நடைமுறைகளை விசாரிக்குமாறு Privy Council எழுத்தரிடம் கோரியுள்ளதாக பிரதமர் திங்கட்கிழமை (23) கூறினார்.

மில்லியன் டொலர்கள் பெறுமதியான ArriveCAN செயலியின் ஒப்பந்தங்களை இரு நபர் கொண்ட நிறுவனத்திற்கு வழங்கியது தர்க்கமற்ற ஒரு முடிவு என அவர் தெரிவித்தார்.

9 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்ட இந்த செயலியின் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தங்களில் 8.3 மில்லியன் டொலர்களை GCstrategies என்ற நிறுவனம் ஆறு வெளி நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தமாக வழங்கியதாக அண்மையில் தெரியவந்தது.

அந்த நிறுவனங்களை பொதுச் சேவை அமைச்சு ஏன் நேரடியாக சேவைக்கு அமர்த்தவில்லை அல்லது அமைச்சினால் ஏன் இந்த பணியை செய்ய முடியவில்லை போன்ற கேள்வியை இந்த செயல்முறை எழுப்பியுள்ளது.

COVID தொற்று காலத்தில் எல்லையைத் தாண்டி நாட்டிற்குள் நுழைபவர்களின் பயன்பாட்டிற்கு ArriveCan செயலி கனடிய அரசாங்கத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

75 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்களுக்கான ஒரு முறை 500 டொலர் கொடுப்பனவு

Gaya Raja

தடுப்பூசி பெற மறுத்ததால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாகாண சபை உறுப்பினர்!

Gaya Raja

நாடாளுமன்ற இலையுதிர் கால அமர்வு ஆரம்பமானது!

Lankathas Pathmanathan

Leave a Comment