தேசியம்
செய்திகள்

இலங்கை அரச அதிகாரிகள் மீதான தடை கனடிய தமிழர்களின் கூட்டு வெற்றி: ஹரி ஆனந்தசங்கரி

நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீதான தடை அறிவித்தல் கனடிய தமிழர்களின் ஒரு கூட்டு வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

செய்வாய்க்கிழமை (10) வெளியான தடை அறிவித்தல் குறித்து தேசியத்திக்கு வழங்கிய பிரதியேக செவ்வியில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

போர்க் குற்றவாளிகள் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது கனடா விதித்த தடைகளை Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி வரவேற்றார்.

கனடிய அரசு இந்த நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீதும் விதித்த தடைகள், இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான அடுத்த கட்டமாக அமைகின்றன எனவும் அவர் கூறினார்.

இந்த தடைகளை விதிப்பதற்கு உழைத்த கனடிய பிரதமர் Justin Trudeau, வெளியுறவு அமைச்சர் Melanie Joly , நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி பாராட்டைத் தெரிவித்தார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 15ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Jasper தேசிய பூங்காவில் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர் மரணம்

Lankathas Pathmanathan

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியின் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் Health கனடா

Gaya Raja

Leave a Comment