தேசியம்
செய்திகள்

லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவு

லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற மூன்று சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி கனடாவின் முக்கியமான கனிமங்களில் முதலீடுகளை விலக்கிக்கொள்ள மூன்று சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவிட்டது.

கனடிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பை ஒரு காரணமாக்குவதாக இதற்குப் பதிலளித்த சீனா குற்றம் சாட்டியது.

இந்த முடிவு சர்வதேச வர்த்தகம், சந்தை விதிகளை மீறியதாகவும் சீனா கூறியது.

கனடாவின் தேசிய பாதுகாப்பு, புலனாய்வு பிரிவின் வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான கடுமையான ஆய்வுக்கு பின்னர் இந்த வெளியேற்ற உத்தரவை கனேடிய அரசாங்கம் எடுத்ததாக தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Shampagne ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கனடா அந்நிய நேரடி முதலீட்டை தொடர்ந்து வரவேற்கும் என கூறிய அமைச்சர், இந்த முதலீடுகள் தேசிய பாதுகாப்பிற்கும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எமது முக்கியமான கனிமங்கள் விநியோகச் சங்கிலிகளை அச்சுறுத்தும் போது தீர்க்கமாக செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.

Related posts

Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது

Lankathas Pathmanathan

பொது சேவை கூட்டணி சமரசத்திற்கு தயாராக வேண்டும்!

Lankathas Pathmanathan

LCBO கடைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தில் மாற்றம்?

Lankathas Pathmanathan

Leave a Comment