தேசியம்
செய்திகள்

சிரியா தடுப்பு முகாமில் இருந்து மூன்று கனடியர்கள் விடுதலை

சிரியாவில் ISIS தடுப்பு முகாமில் இருந்து இரண்டு கனேடிய பெண்களும், ஒரு குழந்தையும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் Kimberly Polman என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் 2019 ஆம் ஆண்டு சிரியாவில் குர்திஷ் போராளிகளால் கைது செய்யப்பட்டு, ISIS உடனான தொடர்பு குறித்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

விடுதலை செய்யப்பட்ட மற்றைய பெண், அவரது மகள் என கூறப்படும் குழந்தையின் அடையாளம் வெளியாகவில்லை.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தரவுகளின் படி, 50 கனடியர்கள் வட கிழக்கு சிரியாவில் இது போன்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என கூறப்படுகிறது.

Related posts

முதலாவது Moderna தடுப்பூசி ஏற்றுமதி கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan

கனேடியர்களில் மூன்றில் இருவர் தடுப்பூசி பெற்றனர்

Gaya Raja

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment