தேசியம்
செய்திகள்

சிரியா தடுப்பு முகாமில் இருந்து மூன்று கனடியர்கள் விடுதலை

சிரியாவில் ISIS தடுப்பு முகாமில் இருந்து இரண்டு கனேடிய பெண்களும், ஒரு குழந்தையும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் Kimberly Polman என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் 2019 ஆம் ஆண்டு சிரியாவில் குர்திஷ் போராளிகளால் கைது செய்யப்பட்டு, ISIS உடனான தொடர்பு குறித்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

விடுதலை செய்யப்பட்ட மற்றைய பெண், அவரது மகள் என கூறப்படும் குழந்தையின் அடையாளம் வெளியாகவில்லை.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தரவுகளின் படி, 50 கனடியர்கள் வட கிழக்கு சிரியாவில் இது போன்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என கூறப்படுகிறது.

Related posts

படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை

Lankathas Pathmanathan

Munich பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் Mark Carney

Lankathas Pathmanathan

Toronto நகர சபை உறுப்பினராக பதவியேற்ற தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment