தேசியம்
செய்திகள்

மீண்டும் வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கவுள்ள மத்திய வங்கி!

வேலை இழப்புகளுக்கு எதிரான நகர்வுகளை கனடிய மத்திய வங்கி எடுக்க வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்தினார்.

புதன்கிழமை (26) மீண்டும் ஒரு வட்டி விகித அதிகரிப்பு முடிவை மத்திய வங்கி எடுக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த கருத்தை Singh வெளியிட்டார்.

மத்திய வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும் எனவும் Singh வலியுறுத்தினார்.

அதிக பணவீக்கத்தை சமாளிக்கும் நோக்கில் மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வுகள் தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன என Singh கூறினார்.

மத்திய வங்கியின் வட்டி விகிதம் இந்த ஆண்டு மூன்று சதவீத புள்ளிகள் உயர்ந்துள்ளது.

புதனன்று மீண்டும் ஒரு உயர்வை நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

எதிர்வரும் பொருளாதாரக் கொந்தளிப்பை தணிக்க, மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுவது அவசியம் என Liberal அரசாங்கமும் வலியுறுத்துகிறது.

வட்டி விகித அதிகரிப்பு, ஏற்கனவே சாவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு மேலும் சவாலாக அமையும் என நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான Chrystia Freeland கூறினார்.

Related posts

சமாதானத்தை நோக்கிய பாதையில் கனடா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்!

Lankathas Pathmanathan

கனடிய பாதுகாப்பு அமைச்சர் உக்ரைனுக்கு திடீர் பயணம்!

Lankathas Pathmanathan

பதில் நடவடிக்கைக்கு கனடா தயார்: அமெரிக்காவின் வரி எச்சரிக்கை குறித்து கனடிய பிரதமர் கருத்து!

Lankathas Pathmanathan

Leave a Comment