தேசியம்
செய்திகள்

உக்ரைனில் ரஷ்யா வாக்கெடுப்பு முடிவுகளை கனடா அங்கீகரிக்காது: பிரதமர் Trudeau

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனில் ரஷ்யாவின் சமீபத்திய போலி வாக்கெடுப்புகளின் முடிவுகளை கனடா எப்போதும் அங்கீகரிக்காது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

புதன்கிழமை (28) உக்ரைன் அதிபரிடம் பேசி கனடிய பிரதமர் இந்த உறுதிப்பாட்டை மீண்டும் வழங்கினார்.

September 23 முதல் 27 வரை ரஷ்ய அரசாங்கம் உக்ரைனில் நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பொதுவாக்கெடுப்புகளை நடத்தியது.

இதில் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக குடியிருப்பாளர்கள் பெருமளவில் வாக்களித்ததாகக் மாஸ்கோ சார்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி Joe Biden உட்பட பல மேற்கத்திய தலைவர்களுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பை ஒரு போலி என பிரதமர் Trudeau விமர்சித்தார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 14ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

மும்பை தாக்குதல் சூத்திரதாரியின் குடியுரிமையை இரத்து செய்ய கனடா முயற்சி?

Lankathas Pathmanathan

Leave a Comment