தேசியம்
செய்திகள்

கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்படும் தமிழர்

Scarboroughவில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட  சம்பவத்தில் தமிழர் ஒருவர் சந்தேக நபராக காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

38 வயதான ஒருவரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் சதீஸ்குமார் ராஜரத்தினம் என்ற சந்தேக நபரை Toronto காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Ryan என்ற பெயரால் அறியப்படும் சதீஸ்குமார் ராஜரத்தினம் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

இவரது கைதுக்கு கனடா முழுவதும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர் ஒரு ஆபத்தானவர் என கூறும் காவல்துறையினர், அவரை காணும் எவரும் அவரை அணுக வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக 911 என்ற அவசர உதவி எண்ணை அழைக்குமாறும் கோரியுள்ளனர்.

Related posts

வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னர் விமான நிலைய செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பின

Lankathas Pathmanathan

Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

பணியின்போது உயிரிழந்த Toronto காவல்துறை அதிகாரியின் இறுதி அஞ்சலி

Lankathas Pathmanathan

Leave a Comment