தேசியம்
செய்திகள்

Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் British Colombiaவில் சுட்டுக் கொலை

1985 ஆம் ஆண்டு Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர் British Colombiaவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Ripudaman Singh Malik, வியாழக்கிழமை (14) காலை British Colombia மாகாணத்தின் Surrey நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

இவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார் என RCMP தெரிவித்தது.

வியாழக்கிழமை நிகழ்ந்தது ஒரு குறிவைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்திற்கிடமான வாகனம் முழுமையாக தீப்பிடித்து எரிந்த நிலையில் காணப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களையும், தப்பிச் செல்லும் வாகனமாக பயன்படுத்தப்பட்ட இரண்டாவது வாகனத்தையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

329 பேரைக் கொன்ற 1985 ஆம் ஆண்டு Air இந்தியா விமான குண்டுவெடிப்பு சதி குற்றச்சாட்டுகளிலிருந்து Malik, Ajaib Singh Bagri ஆகியோர் 2005ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Conservative இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்படுவேன்: இடைக்கால தலைவர் Bergen

Lankathas Pathmanathan

பொது தேர்தல் விவாதங்களுக்கு ஐந்து கட்சித் தலைவர்கள் அழைப்பு!

Gaya Raja

மீண்டும் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் மத்திய வங்கி?

Lankathas Pathmanathan

Leave a Comment