தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் Laval மாநகர சபையில் நிறைவேறியது

Quebec மாகாணத்தின் Laval மாநகர சபை தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேறியுள்ளது.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என Laval மாநகரசபை புதன்கிழமை (13) ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இந்த தீர்மானத்தின் முதலாவது முன்மொழிவு கடந்த மாதம் 7ஆம் திகதி சபையில் இடம் பெற்றது.

புதன்கிழமை அமர்வில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இனப்படுகொலை குறித்து கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு Laval மாநகர சபை வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய வரலாற்றில் முதல் முதற்குடியின முதல்வர் விரைவில்?

Lankathas Pathmanathan

மீட்பு நடவடிக்கைக்காக ஆப்கானிஸ்தான் சென்றடைந்த கனேடிய படையினர்!

Gaya Raja

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் தமிழர் உட்பட நால்வர் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment