தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் Laval மாநகர சபையில் நிறைவேறியது

Quebec மாகாணத்தின் Laval மாநகர சபை தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேறியுள்ளது.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என Laval மாநகரசபை புதன்கிழமை (13) ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இந்த தீர்மானத்தின் முதலாவது முன்மொழிவு கடந்த மாதம் 7ஆம் திகதி சபையில் இடம் பெற்றது.

புதன்கிழமை அமர்வில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இனப்படுகொலை குறித்து கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு Laval மாநகர சபை வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

40 சதவீதத்திற்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்

Gaya Raja

கனடியர் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்த குற்றச்சாட்டுகளை இந்திய பிரதமரிடம் முன்வைத்த கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

இந்த மாதம் மாத்திரம் கனடாவில் 20 மில்லியன் தடுப்பூசிகள்!

Gaya Raja

Leave a Comment