February 12, 2025
தேசியம்
செய்திகள்

சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நிதியுதவி குறித்து கலந்துரையாட மத்திய அரசிடம் கோரிக்கை

சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நிதியுதவி குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு மத்திய அரசிடம் மாகாண முதல்வர்கள் கோருகின்றனர்.

கனடாவின் 13 மாகாணங்கள், பிரதேசங்களின் முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை (12) இரண்டாவது நாளாக British Colombia மாகாணத்தில் சந்தித்தது.

மத்திய அரசாங்கம், சிதைந்து வரும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து மாகாணங்கள், பிராந்தியங்களுடன் கலந்துரையாட வேண்டும் என British Colombia முதல்வர் John Horgan கூறினார்.

நிலையான, நீண்ட கால சுகாதாரப் பாதுகாப்பு நிதிக்கான கோரிக்கையை நிவர்த்தி செய்ய, முதல்வர்களைச் சந்திப்பதாக பிரதமர் Justin Trudeau உறுதியளித்து எட்டு மாதங்கள் ஆகின்றன எனவும் Horgan நினைவுபடுத்தினார்.

சுகாதார அமைப்புகள் நெருக்கடியில் உள்ள நிலையில் மத்திய அரசு மாகாணங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முன்னதாக சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos கூறியிருந்தார்.

Related posts

குழந்தைகள் மீதான COVID தாக்கத்தை ஆராயும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் நிதியுதவி

Lankathas Pathmanathan

கனடியத் தமிழர் பேரவையின் புதிய பணிப்பாளர் சபை அறிவிப்பு

Lankathas Pathmanathan

கனேடியர் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்த குற்றவியல் விசாரணை வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment