தேசியம்
செய்திகள்

வீட்டு மேம்பாட்டுத் திட்டங்களில் மோசடி தொடர்பான விசாரணையில் தமிழர் கைது

Durham நகரில் வீட்டு மேம்பாட்டுத் திட்டங்களில் மோசடி தொடர்பான விசாரணையில் தமிழர் ஒருவர் கைதாகியுள்ளார்.

கடந்த வருடம் June மாதம் முதல் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் Ajax நகரை சேர்ந்த 31 வயதான ஜனார்த்தனன் சத்தியநாதன் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Trusted Remodeling என்ற வீட்டு மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக மூவர் முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களிடம் 28 ஆயிரம் டொலர்களுக்கு மேல் மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டில்  ஒன்பது குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இவர் மூலம் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan முடிவு

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற கோடை இடைவேளைக்குள் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முயற்சிக்கும் அரசாங்கம்

Gaya Raja

Carbon வரி உயர்வை எதிர்க்கும் நகர்வில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்த B.C. முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment