தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தளர்த்தப்பட்டும் COVID பயண விதிகள்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட, தடுப்பூசி போடப்படாத, பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கான COVID  எல்லை விதிகளை எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் கனடா மாற்றுகிறது.

ஐந்து முதல் 11 வயது வரையிலான தடுப்பூசி போடப்படாத, பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு இனி கனடாவில் நுழைவதற்கு COVID சோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.

April 25 அதிகாலை 1 மணி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெற்றோர், பாதுகாவலர் அல்லது ஆசிரியருடன் வரும் இந்த வயதினருக்கு இனி COVID  நுழைவுக்கு முந்தைய பரிசோதனைகள்  அவசியமில்லை என வெள்ளிக்கிழமை (22) அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், தற்போது கனடாவுக்குள் நுழைய தகுதியுடைய 12 வயதிற்கு மேற்பட்ட வயதுடைய, பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட அல்லது தடுப்பூசி போடப்படாத பயணிகளுக்கு முன்-நுழைவுச் சோதனைகள் தேவைப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் COVID பரிசோதனை முடிவை வழங்க வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் மேலும் கூறியுள்ளது.

Related posts

Ontarioவில் திங்கட்கிழமை COVID மரணங்கள் எதுவும் இல்லை!

Gaya Raja

இலங்கையின் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான FTG சர்வதேச மாநாடு அடுத்த மாதம் கனடாவில்!

Lankathas Pathmanathan

வங்கி கொள்ளை குறித்த குற்றச்சாட்டில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment