மத்திய எரிவாயு வரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பிரதமர் Mark Carney முடிவு செய்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் எரிவாயு மீதான மத்திய வரியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளது.
அடுத்த வாரம் முதல் தொழிலாளர் தினம் வரை மத்திய எரிபொருள் வரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் Mark Carney செவ்வாய்க்கிழமை (14) தலைநகர் Ottawa-வில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மூன்று இடைத்தேர்தல் வெற்றிகள் மூலம் அவரது அரசாங்கம் பெரும்பான்மையைப் பெற்ற சில மணிநேரங்களுக்கு பின்னர் இந்த அறிவித்தல் வெளியானது.
இதன் மூலம் எரிபொருளின் விலை நான்கு சதம் மூலம் 10 சதம் வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் விலைகள் நிலையற்றதாக இருக்கும் நிலையில், இந்தத் தடை April 20 அன்று அமுலுக்கு வந்து September 7 வரை நீடிக்க உள்ளது.
இந்த நடவடிக்கை “குறிப்பிட்ட இலக்கை நோக்கியது”, தற்காலிகமானது என பிரதமர், வலியுறுத்தினார்.
முன்னதாக நீக்கப்பட்ட நுகர்வோர் carbon வரியுடன் இணைந்து, அரசாங்கம் ஒரு litre எரிவாயு விலையை 28 சதம் வரை குறைத்துள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் செலவு $2.4 பில்லியனாக இருக்கும் என Mark Carney கூறினார்.
ஆனாலும் இது “போதுமானதாக இல்லை’” என எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre விமர்சித்துள்ளார்.
