தேசியம்
செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் போர் நிறுத்தத்திற்கான  அழைப்பை கனடாவின் வெளியுறவு அமைச்சர்  விடுத்தார்.
ரஷ்ய ஆட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேனிய அரசுக்கு இந்த போர் நிறுத்தம் அவசியமென கனடிய வெளியுறவு அமைச்சர்  Melanie Joly கூறினார்.

அதிகபட்ச அழுத்தத்தை திணிப்பதன் மூலம் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது உக்ரேனியர்களுக்கு ஆதரவளிப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்  Joly கூறினார்..

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதியுடன் பேசிய கனடிய பிரதமர் Justin Trudeau, அவரை கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பை விடுத்தார்.

மெய்நிகர் மூலம் கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான இந்த  அழைப்பை உக்ரேனிய அதிபர் Volodymyr Zelenskyy  ஏற்றுக் கொண்டார்.

Related posts

தொடர்ந்தும் நானூறுக்கும் அதிகமாக காட்டுத்தீ எரிந்து வருகிறது

Lankathas Pathmanathan

தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan

இலங்கை: சீரழிந்து வரும் பொருளாதாரம் – உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா கவலை

Leave a Comment