தேசியம்
செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் போர் நிறுத்தத்திற்கான  அழைப்பை கனடாவின் வெளியுறவு அமைச்சர்  விடுத்தார்.
ரஷ்ய ஆட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேனிய அரசுக்கு இந்த போர் நிறுத்தம் அவசியமென கனடிய வெளியுறவு அமைச்சர்  Melanie Joly கூறினார்.

அதிகபட்ச அழுத்தத்தை திணிப்பதன் மூலம் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது உக்ரேனியர்களுக்கு ஆதரவளிப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்  Joly கூறினார்..

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதியுடன் பேசிய கனடிய பிரதமர் Justin Trudeau, அவரை கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பை விடுத்தார்.

மெய்நிகர் மூலம் கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான இந்த  அழைப்பை உக்ரேனிய அதிபர் Volodymyr Zelenskyy  ஏற்றுக் கொண்டார்.

Related posts

55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கலை நிறுத்த NACI பரிந்துரை

Gaya Raja

முக்கிய அடமான அழுத்த சோதனை விகிதத்தில் மாற்றம் இல்லை

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தளர்த்தப்பட்டும் COVID பயண விதிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment