தேசியம்
செய்திகள்

அகால மரணமான தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்தன!

கடந்த வாரம் அகால மரணமான தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியைகள்  திங்கட்கிழமை  நடைபெற்றது.

MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த நெடுஞ்செழியன் கோபாலபிள்ளை என்ற இளைஞர் கடந்த செவ்வாய்க்கிழமை அகால மரணமடைந்தார்.

இவரது பூதவுடல் ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும்  பார்வைக்கு வைக்கப்பட்டு திங்கட்கிழமை இறுதிக் கிரியைகள்  நடைபெற்றது.

இவர் 492 தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களுடன் 2010ஆம் ஆண்டு  August மாதம் British Colombia மாகாணத்தை வந்தடைந்த MV Sun Sea கப்பலில் பயணித்து கனடாவை வந்தடைந்தவராவார்.

இவரது அகதி கோரிக்கை கனடாவில் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என நண்பர்கள் தேசியத்திடம் தெரிவித்தனர்.

தாயகத்தில் மட்டக்களப்பை சொந்த இடமாக கொண்ட இவர் சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

Related posts

2023 ஆரம்பத்தில் கனடாவில் மந்தநிலை முன்னறிவித்தல்

Lankathas Pathmanathan

வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னர் விமான நிலைய செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பின

Lankathas Pathmanathan

Ontario மாகாண Windsor-Tecumseh-Lake Shore தொகுதியில் Conservative வெற்றி உறுதி!

Lankathas Pathmanathan

Leave a Comment