September 9, 2026
தேசியம்
செய்திகள்

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க முடியாது: கனடா

குற்றம் சாட்டப்பட்ட இலங்கையின் போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க கனடிய அரசாங்கம் மறுத்துள்ளது.

முன்னாள் விமானப்படை தளபதியும், போர்க்குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டவருமான சுமங்கள டயஸ், இலங்கையின் கனடாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்.  ஆனாலும் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள கனடிய அரசாங்கம் மறுத்துள்ளது.

தமிழ் கனேடியர்களும், தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அவர் ஒரு போர்க் குற்றவாளியென குற்றம் சாட்டிய நிலையில் கனேடிய அரசாங்கம் அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. கனடாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக இவரை நியமிக்க கடந்த ஆண்டு Novemberரில் வெளியான அறிவிப்பு கனடாவில் கடும் எதிர்ப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

TikTok செயலி தடை குறித்த கட்சித் தலைவர்கள் நிலைப்பாடு

Lankathas Pathmanathan

பொது சேவை கூட்டணியுடன் மத்திய அரசின் புதிய ஒப்பந்தத்திற்கு ஒரு வருடத்திற்கு $1.3 பில்லியன் செலவு

Lankathas Pathmanathan

COVID பயண விதிகளை விலக்க பிரதமர் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment