Alberta மாகாணம் கனடாவில் இருந்து பிரிவது குறித்த பொது வாக்கெடுப்பில் (Referendum) தமக்கு வெற்றி கிடைக்கும் என பிரிவினைவாத ஆதரவாளர்கள் தீவிரமாக நம்புவதாக புதிய பிரத்யேகக் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால், கள நிலவரப்படி அவர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.
இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின.
இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 64 சதவீதத்தினர் கனடாவுடன் நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
24 சதவீதத்தினர் மட்டுமே பிரிவினை ஆதரவு பணிகளுக்கு வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
மீதமுள்ளவர்கள் இதில் முடிவுகள் எதையும் எடுக்கவில்லை என அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
ஆனாலும் பிரிவினைவாத ஆதரவாளர்கள் தங்களுக்கு 57 சதவீத வாக்குகள் கிடைத்துத் தாங்களே வெற்றி பெறுவோம் என அதீத நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இதில் வாக்காளர்கள் எந்த அளவிற்கு வந்து வாக்களிக்கிறார்கள் (Voter Turnout) என்பதுதான் தங்களின் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும் என இருதரப்பு பிரச்சாரக் குழுக்களும் நம்புகின்றன.
October 19 நடைபெறவுள்ள இந்தத் தேர்தலுக்காக, பிரிவினை ஆதரவாளர்களும் கூட்டாட்சி ஆதரவாளர்களும் மாகாணம் முழுவதும் தங்களின் இறுதி கட்டப் பிரச்சார வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்த வாக்கெடுப்புக்கு பிந்தைய அரசியல் சூழலில் பெரிய அளவிலான குழப்பங்களையும், எதிர்பார்ப்பு முரண்பாடுகளையும் தோற்றுவிக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
