வெறுப்புணர்ச்சி, பயங்கரவாதத்திற்கு எதிராக கனடா எப்போதும் உறுதியுடன் இருக்கும் என கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
9/11 நினைவு தினத்தில் வெளியான அவரது அதிகாரப்பூர்வ இரங்கல் செய்தியில், அமெரிக்காவுடனான கனடாவின் நீண்டகால நட்புறவும், மனிதாபிமானமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும் எங்கள் துயரம் இன்னும் மறையவில்லை என Mark Carney தனது அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுமார் 3,000 பேருக்கு பிரதமர் தனது அஞ்சலியைச் செலுத்தினார்.
இதில் பலியான 24 கனடிய குடிமக்களையும், காயமடைந்த ஆயிரக் கணக்கானோரையும் அவர் நினைவு கூர்ந்தார்.
9/11 தாக்குதலின் பின்னர் அமெரிக்க வான்வெளி மூடப்பட்ட போது, எவ்வித தயக்கமும் இன்றி 224 விமானங்களை கனடா தரையிறங்க அனுமதித்ததை Mark Carney குறிப்பிட்டார்.
9/11 தாக்குதலுக்கு பின்னர், ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற 40,000-க்கும் மேற்பட்ட கனடிய வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் பிரதமர் மனமாரப் போற்றினார்.
