Vancouver காவல்துறை அதிகாரி ஒருவர் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 ஆண்டுகள் Vancouver காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய Kalwinder “Kal” Dosanjh என்பவர் கைது செய்யப்பட்டார்.
சுமார் $3 மில்லியன் மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது குறித்து செய்தியாளர்களை சந்தித்த Vancouver காவல்துறைத் தலைவர் Steve Rai விவரங்களை வெளியிட்டார்.
“இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது” என Steve Rai தெரிவித்தார்.
சந்தேகநபர் சம்பளமில்லாத பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் Steve Rai தெரிவித்தார்.
கடந்த 2.5 ஆண்டுகளாக காவல்துறையினர் நடத்திய இரகசிய விசாரணையின் பின்னர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி வழக்கில் இதுவரை 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் 2017 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ளன.
சந்தேக நபர் மீது நான்கு மோசடி வழக்குகள், நான்கு திருட்டு வழக்குகள் உள்ளிட்ட குற்றசாட்டுகள் பதிவாகின.
இந்த விசாரணையில் Sarabjit Singh Gill என்ற 51 வயது நபரும் கூட்டு சதியாளராகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள Kalwinder Dosanjh, இளைஞர்களை குற்றச் செயல்களில் இருந்து மீட்பதற்காக உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற KidsPlay Youth Foundation என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமாவார்.
அவர் தனது சொந்த அறக்கட்டளையின் பணத்தையும் திருடி மோசடி செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இருப்பினும், Kalwinder Dosanjh எந்தத் தவறும் செய்யவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தார்.
சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
