கனடாவுக்காகப் போராடுவோம் என Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.
Alberta மாகாண பிரிவினைவாதம் குறித்து Conservative ஆதரவாளர்களிடம் சனிக்கிழமை (05) ஆற்றிய உரையில் எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre கருத்து தெரிவித்தார்.
“கனடாவுக்காக நாங்கள் போராடுவோம்,” என கூறிய Pierre Poilievre, Alberta மக்களை மீண்டும் வென்றெடுப்பதற்கான வரவிருக்கும் பொதுவாக்கெடுப்பு உட்பட, அனைத்திலும் நம்பிக்கையின் ஊடாக போராடுவோம் என Pierre Poilievre கூறினார்.
இந்த விவாதத்தில் இரு தரப்பிலும் உள்ள மக்களிடமும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த கனடாவை ஆதரிப்பதில் உறுதியாக இருப்பதாக அவர் கூறினாலும், இந்த விவாதத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கருத்துக்களை கேட்கவும், அவர்களின் நியாயமான கவலைகளுக்கு தீர்வு காணவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
