கனடாவின் அடுத்த நீர்மூழ்கிக் கப்பல் தொகுதியைத் தேர்ந்தெடுக்க பிரதமர் தயாராக உள்ளார்.
நீண்ட காலமாக நிலவி வரும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் Mark Carney திங்கட்கிழமை (06) அறிவிப்பொன்றை வெளியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவித்தலில் கனடாவின் அடுத்த நீர்மூழ்கிக் கப்பல் படையை ஜெர்மானிய நிறுவனங்களா அல்லது தென் கொரிய நிறுவனங்களா உருவாக்கும் என்பதை பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Halifax நகரில் இந்த அறிவிப்பு குறித்து Liberal அரசாங்கம் மிகவும் மௌனமாகவும் இரகசியத்தன்மையுடனும் இருந்து வருகின்றது.
NATO மாநாட்டில் கலந்து கொள்வதற்கு துருக்கி பயணமாகும் வழியில் பிரதமர் Halifax நகரில் இந்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார் என பாதுகாப்பு, தூதரக வட்டார தரவுகள் தெரிவிக்கின்றன.
