தேசியம்
செய்திகள்

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் ஆரம்பம்

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் இன்று (புதன்) ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் கனடா சர்வதேச மாணவர்களுக்கான புதிய பணி அனுமதி திட்ட விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்கின்றது. கனடாவில் அதிகமான மக்களை நிரந்தரமாக குடியேற வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாத ஆரம்பத்தில் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்திருந்தது.

முதுகலை பட்டப்படிப்பு பணி அனுமதி பெற்ற முன்னாள் மாணவர்கள் காலாவதியான அல்லது விரைவில் காலாவதியாகும் அனுமதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என குடிவரவு அமைச்சர் Marco Mendicino கூறினார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வேலை தேடுவதற்காக கனடாவில் 18 மாதங்கள் வரை தங்க இந்த திட்டம் வழி வகுக்கின்றது.

இந்தத் திட்டத்தினால் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் பயனடையலாம் என மதிப்பிடுகின்றது.

Related posts

மாத இறுதியில் Ontarioவில் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

AHS ஊழல் குற்றச்சாட்டு: துணை அமைச்சர்களை மாற்ற Alberta முதல்வர் முடிவு

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: வெளியேற்றப்பட்டது கனடிய பெண்கள் கால்பந்தாட்ட அணி

Lankathas Pathmanathan

Leave a Comment