November 16, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் ஆரம்பம்

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் இன்று (புதன்) ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் கனடா சர்வதேச மாணவர்களுக்கான புதிய பணி அனுமதி திட்ட விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்கின்றது. கனடாவில் அதிகமான மக்களை நிரந்தரமாக குடியேற வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாத ஆரம்பத்தில் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்திருந்தது.

முதுகலை பட்டப்படிப்பு பணி அனுமதி பெற்ற முன்னாள் மாணவர்கள் காலாவதியான அல்லது விரைவில் காலாவதியாகும் அனுமதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என குடிவரவு அமைச்சர் Marco Mendicino கூறினார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வேலை தேடுவதற்காக கனடாவில் 18 மாதங்கள் வரை தங்க இந்த திட்டம் வழி வகுக்கின்றது.

இந்தத் திட்டத்தினால் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் பயனடையலாம் என மதிப்பிடுகின்றது.

Related posts

மீண்டும் சிறுபான்மை ஆட்சியமைக்கும் Liberal கட்சி!

Gaya Raja

தரையிறக்கப்பட்ட Air Canada விமானங்கள்

Lankathas Pathmanathan

ஆளுநர் நாயகம் – மகாராணி சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment