Ontario நீதிமன்றத்திற்கு புதிய சமாதான நீதிபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Ontario தலைமை வழக்கறிஞர் Doug Downey, 2026 July 8-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், Ontario நீதிமன்றத்திற்கு 27 புதிய சமாதான நீதிபதிகளை நியமித்தார்.
இவர்களில் ரமணன் செந்தில்முருகன் என்ற தமிழரும் ஒருவராவார்.
சமாதான நீதிபதியாக நியமனம் பெற்றுள்ள ரமணன் செந்தில்முருகன், நிதித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
இவர் தற்போது Canadian Human Rights Voice அமைப்பின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
Oshawa நகருக்கு சமாதான நீதிபதி ரமணன் செந்தில்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார் என கடந்த வாரம் வெளியான Ontario அரசாங்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
