Montreal நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.
இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மின்வெட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (21) காலை நிலவரப்படி, சுமார் 4,500 இல்லங்கள் சேவைத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக Hydro-Quebec நிறுவனம் தெரிவித்தது.
Montreal நகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை சில மணி நேரங்களில் 100 முதல் 150 millimetres வரை மழை பதிவாகியுள்ளது.
அங்கு நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது என Pierrefonds-Roxboro நகராட்சியின் நகர முதல்வர் Jim Beis கூறினார்.
சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டதை விட தனது சமூகத்தில் அதிக அளவிலான மழை பதிவானதாக அவர் தெரிவித்தார்.
இதனால் பல நூறு வீடுகள் கடுமையாக வெள்ளத்தில் மூழ்கியதாகவும், சாலைகள் மூடப்பட்டதாகவும் நகர முதல்வர் கூறினார்.
இதில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத் தர Quebec மாகாண பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் Ian Lafrenière உறுதியளித்தார்.
