Ebola நோய் பரவலால் பாதிக்கப்பட்ட கிழக்கு Congo ஜனநாயகக் குடியரசு பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம் என கனடியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Congo ஜனநாயகக் குடியரசில் அரிய வகை Ebola நோய் தாக்கியுள்ள மாகாணத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் என கனடியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்துகிறது.
இந்த தொற்றுநோயின் தாக்கம் குறித்து கவலை அடைவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.
இதனால் 130 மரணங்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நோய் பரவலால் கனடியர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்த கோரிக்கைக்கு கனடிய வெளிவிவகார அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் கிழக்கு Ituri மாகாணத்திற்கு அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடா அரசாங்கம் கூறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் அங்கு நோய் பரவல் அறிவிக்கப்பட்டு அது பின்னர் வடக்கு Kivu, உகாண்டாவிற்கும் பரவியுள்ளது.
கனடிய எல்லையில் Ebola குறித்த பிரத்யேகமான பயணத் தொடர்பான சுகாதார நடவடிக்கைகள் எதுவும் இல்லை என கனடாவின் பொது சுகாதார முகமை தெரிவித்தது.
ஆனாலும் தேவைக்கேற்ப பொது சுகாதாரத் தலையீடுகளை கண்காணித்து வருவதாக பொது சுகாதார முகமையகம் தெரிவித்துள்ளது.
