கோடை கால வெளிநாட்டு பயணங்களில் தடங்கல்கள் ஏற்பட கூடும் என கனடிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்த எச்சரிக்கை அறிவுறுத்தல் ஒன்றை மத்திய அரசு இந்த வாரம் வெளியிட்டது.
மத்திய கிழக்கில் தொடரும் யுத்தம் இதற்கு காரணமாக அமையும் என எச்சரிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் சூழலால், உலகெங்கிலும் உள்ள பயணிகள் அறிந்திருக்க வேண்டிய சவால்கள் உள்ளன என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் அல்லது அப்பகுதி வழியாக வேறு இடத்திற்கு செல்பவர்களின் திட்டங்கள், குறுகிய அறிவிப்பில் பாதிக்கப்படலாம் எனவும் அந்த ஆலோசனைக் குறிப்பு தெரிவித்தது.
வெளிநாட்டு பயணத்தை “ஒரு தனிப்பட்ட விருப்பம்” என குறிப்பிட்ட இந்த எச்சரிக்கை, வெளிநாடுகளில் சிக்க நேரிடும் கனடியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவி “வரையறுக்கப்பட்டதாக இருக்கலாம்” எனவும் கூறியது.
வெளிநாடுகளில் சிக்க நேரிடும் கனடியர்களுக்கு அரசாங்கத்தால் எந்த நிதி உதவியும் வழங்கப்படாது எனவும் இந்த பயண ஆலோசனை குறிப்பிடுகிறது.
