Mexico-வில் தொடரும் வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கனடியர்கள் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடிய அரசாங்கம் வலியுறுத்துகிறது.
மேற்கு Mexico-வின் Puerto Vallarta அருகே முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் போது பிரதான போதைப்பொருள் கும்பலின் தலைவர் Nemesio Ruben Oseguera Cervantes இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (22) கொல்லப்பட்டார்.
இதனையடுத்து உடனடியாக Mexico-வின் பல மாநிலங்களில் வன்முறையும் அமைதியின்மையும் பரவியது.
இதன் பின்னணியில் தோன்றியுள்ள தற்போதைய பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு மத்தியில் உள்ளூர் அதிகாரிகள் வழிகாட்டுதல்களை பின்பற்ற கனடியர்கள் அரசாங்கத்தினால் வலியுறுத்தப்படுகின்றனர்.
கனடிய விமான நிறுவனங்கள் தமது கால அட்டவணையை மாற்றி அமைத்ததுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக சில விமான சேவைகளை தாமதமாகியுள்ளது – அல்லது இரத்து செய்துள்ளது.
Mexico-வின் வெளியுறவு அமைச்சருடன் தொடர்பில் இருப்பதாகவும், வரும் நாட்களில் நிலைமை சீராகும் என அவர் தன்னிடம் உறுதிப்பளித்ததாகவும் கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
கனடியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக Mexico-விற்கான கனடிய தூதர், தூதரக ஊழியர்கள் தங்கள் சகாக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கனடியர்கள் உள்ளூர் அதிகாரிகள் வழிகாட்டுதலைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்கும் போது மட்டுமே பயணம் செய்ய வேண்டும்,” எனவும் அவர் கூறினார்.
திங்கட்கிழமை (23) நிலவரப்படி Mexico-வில் 26,000-க்கும் மேற்பட்ட கனடியர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
Mexico-வில் உள்ள அனைத்து கனடியர்கள் மத்திய அரசிடம் இருந்து உதவி, தகவல்களைப் பெறுவதை உறுதி செய்ய தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
Mexico-வில் உள்ள கனடியர்களிடமிருந்து இதுவரை கனடிய வெளிவிவகார அமைச்சுக்கு 440 தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அனிதா ஆனந்த் கூறினார்,
இவற்றில் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு இரண்டு , நிதி உதவிக்கான ஒரு கோரிக்கை ஆகிய அழைப்புகளும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு கனடியர்கள் எவ்வாறு காயமடைந்தனர் என்பதை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
