Québec மாகாணத்தின் Montréal நகரில் நிகழ்ந்த கத்திக் குத்து தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
Montreal கிழக்கு அடுக்குமாடி குடியிருப்பில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக வெள்ளிக்கிழமை (17) காலை மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக Montreal காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் 19 வயதான Arthur Galarneau என தெரியவருகிறது.
![](https://thesiyamnation.com/storage/2023/03/arthur-galarneau-1-6318205-1679085130892-300x168.jpeg)
பலியானவர்களும் கைது செய்யப்பட்டவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.
இந்த சம்பவம் குறித்து Montreal நகர முதல்வர் Valerie Plante கவலை தெரிவித்தார்.