தேசியம்
செய்திகள்

Montréal கத்திக் குத்தில் மூவர் பலி – சந்தேக நபர் கைது!

Québec மாகாணத்தின் Montréal நகரில் நிகழ்ந்த கத்திக் குத்து தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

Montreal கிழக்கு அடுக்குமாடி குடியிருப்பில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக வெள்ளிக்கிழமை (17) காலை மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக Montreal காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் 19 வயதான Arthur Galarneau என தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் Arthur Galarneau

பலியானவர்களும் கைது செய்யப்பட்டவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.

இந்த சம்பவம் குறித்து Montreal நகர முதல்வர் Valerie Plante கவலை தெரிவித்தார்.

Related posts

ரஷ்ய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய கனடா

Lankathas Pathmanathan

வரி விதிப்புக்கும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கும் தொடர்பு இல்லை: Donald Trump

Lankathas Pathmanathan

ருவாண்டாவில் தூதரகம் ஒன்றை திறக்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment