தேசியம்
செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்தின் புதிய இயக்குநர்கள் சபை அறிமுகம்!

தமிழ்ச் சமூக மையத்தின் 2025–2026 ஆம் ஆண்டுக்கான இயக்குநர்கள் சபை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்வம், தொலைநோக்கு, பொறுப்புணர்வுடன் கூடிய அர்ப்பணிப்புள்ள தன்னார்வத் தலைவர்களின் குழுவாக இந்த 13 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு அமையும் என தமிழ்ச் சமூக மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தீபனா தேவதாஸ், கோகுலன் முருகையா, கார்த்தி கனகேஸ்வரன், ரமணன் சந்திரசேகரமூர்த்தி, கீர்த்தனா Rang, சாயந்தா சுயேஷ்குமார், சரண் ஸ்ரீஸ்கந்தராஜா, குபேஷ் நவரட்னம், ராஜன் பாலா, மஞ்சு ரவீந்திரன், சந்தா பஞ்சலிங்கம், டிலுசினி சிவஞானசுந்தரம், மகிந்தன் வேலுப்பிள்ளை ஆகியோர் இந்த புதிய இயக்குநர்கள் குழுவில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களின் அர்ப்பணிப்பும் நிபுணத்துவமும், நமது சமூகத்தை ஒன்றிணைத்து, அடுத்த தலைமுறையினருக்கு மேம்படுத்தும் ஒரு சமூக மையத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடுத்த கட்டத்திற்கு எம்மை வழிநடத்தும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய நினைவு தின விழாவை தவற விடவுள்ள பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

“சாத்தியமான ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தயாராக உள்ளோம்” – Donald Trump வரி எச்சரிக்கைக்கு Justin Trudeau பதில்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment