Portugal நாட்டின் Lisbon நகர விபத்தில் இரண்டு கனடியர்கள் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது.
சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான streetcar புதன்கிழமை (03) விபத்துக்கு உள்ளானதில் 17 பேர் பலியானதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர்.
காணாமல் போன கனடியர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர் என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணங்கள் குறித்த ஊகிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
