தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் மனு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Jamil Jivani இந்த மனுவை ஆரம்பித்துள்ளார்.
நீடித்து நிலைக்க முடியாத அளவிலான குடியேற்றத்திற்கு தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் பிரதான காரணியாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தத் திட்டம் கனடியர்களிடமிருந்து வேலைகளைப் பறிப்பதாகவும், ஊதியங்களை குறைக்க காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மருத்துவர் பற்றாக்குறை, மருத்துவமனை நெரிசல்கள், வீடு நெருக்கடி, சவாலான வேலைச் சந்தை ஆகியவற்றுடன் குடியேற்றம் தொடர்பு படுவதாக Jamil Jivani தெரிவித்தார்.
Conservative கட்சியின் நிழல் அமைச்சர் பதவி எதையும் Jamil Jivani வகிக்கவில்லை.
இதனால் இந்த மனு ஒரு தனிநபர் மனுவாக அமையும் என தெரியவருகிறது.
இந்த மனு குறித்த கருத்துக்கான கோரிக்கைக்கு Conservative கட்சி உடனடியாக பதிலளிக்கவில்லை.
