Brampton நகரில் 3 இழுவை வண்டிகள் (tow trucks) தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Brampton நகரில் ஒரே இரவில் மூன்று இழுவை வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் குறித்து Peel பிராந்திய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினரால் தீ அணைக்கப்பட்டதாகவும், இந்த சம்பவங்களிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்களை புலனாய்வாளர்கள் சந்தேகத்திற்குரியதாக கருதுகின்றனர்.
இதில் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
