தேசியம்
செய்திகள்

GO புகையிரதத்தின் கூரையில் இருந்து விழுந்த 15 வயது சிறுவன்

GO புகையிரதத்தின் மேற்கூரையில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவைத் தாண்டி Union புகையிரத நிலையத்தில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த புகையிரதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சிறுவன் மேலும் மூன்று இளைஞர்களுடன் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் புகையிரதம் இயக்கத்தில் இருந்தபோது கூரையின் மீது ஏறியதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஒரு கட்டத்தில் இந்த சிறுவன் புகையிரத கூரையில் இருந்து விழுந்தான் என காவல்துறையினர்  கூறுகின்றனர்.

இந்த அபாயகரமான சம்பவம் குறித்த விசாரணையில் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவதாக Metrolinx தெரிவித்துள்ளது.

Related posts

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்  இறப்புகளின் எண்ணிக்கையும்   அதிகரிக்கலாம் – புதிய எச்சரிக்கை

Lankathas Pathmanathan

தொற்றுக் காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டு!

Gaya Raja

புதிய அமெரிக்க அதிபருடன் நாளை (வெள்ளி) கனடிய பிரதமர் உரையாடவுள்ளார்!

Lankathas Pathmanathan

Leave a Comment