தேசியம்
செய்திகள்

புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட பலரை Toronto காவல்துறையினர் கைது செய்தனர்.

செவ்வாய்க்கிழமை (16) பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பல மணி நேரம் புகையிரத பாதைகள் தடைபட்டன.

மாலை 3 மணியளவில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 முதல் 120 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டதாக காவல்துறையினர் மதிப்பிட்டனர்.

இரவு 7.30 மணியளவில் புகையிரத பாதையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் முயற்சியில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் GO புகையிரத  UP Express சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என Metrolinx தெரிவித்துள்ளது.

Related posts

முதற்குடியினர் அனுபவித்த வன்முறை மீண்டும் நிகழாத எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன்: திருத்தந்தை பிரான்சிஸ்

நாடாளுமன்றத்திற்கு தேர்வான Liberals, NDP, Bloc Quebecois உறுப்பினர்கள் தடுப்பூசி போட வேண்டும்: கட்சி தலைமை வலியுறுத்தல்! 

Gaya Raja

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இருவர்

Lankathas Pathmanathan

Leave a Comment