தேசியம்
செய்திகள்

Pickering சூதாட்ட மைய காவலாளி கொலையுடன் தொடர்புடைய வழக்கில் 17 வயது ஆணுக்கு பிடியாணை!

Pickering சூதாட்ட மைய காவலாளியின் கொலையுடன் தொடர்புடைய வழக்கில் 17 வயது ஆணுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

17 வயது ஆணுக்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக Durham பிராந்திய காவல்துறை தெரிவித்தது.

October மாதம் 9ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் Pickering சூதாட்ட மையத்தின் காவலாளி Michael Ferdinand சுட்டுக் கொல்லப்பட்டார்.

Whitby குடியிருப்பாளரான இவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

34 வயதான இவரது மரணம் குறித்த குற்றச் சாட்டில் 17 வயது ஆணுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைக்கு தேடப்படும் இளைஞரை அடையாளம் காண காவல்துறை நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளது.

இந்த அங்கீகாரம் எதிர்வரும் சனிக்கிழமையுடன் (11) முடிவடைகிறது.

Tyjae Nosworthy-Smith என அடையாளம் காணப்பட்ட இவரது கைதுக்கு இரண்டாம் நிலை கொலைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரது புகைப்படத்தையும் காவல்துறையினர் தற்காலிகமாக வெளியிட்டுள்ளனர்.

Related posts

வியாழக்கிழமை தமிழ் ஊடகங்களை சந்திக்கவுள்ள NDP தலைவி

Lankathas Pathmanathan

கனேடியர்களுக்கு மின்னணு விசா சேவைகளை மீண்டும் ஆரம்பித்த இந்தியா

Lankathas Pathmanathan

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment