தேசியம்
செய்திகள்

இஸ்ரேலில் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய $10 மில்லியன் உதவி வழங்கும் கனடா

இஸ்ரேல், காசாவில் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய 10 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா வழங்குகிறது.

பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (12) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த உதவி வழங்கப்படுவதாக பிரதமர் கூறினார்.

அனுபவம் வாய்ந்த, நம்பகமான மனிதாபிமான பங்காளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Ahmed Hussen தெரிவித்தார்.

தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தியிருக்கும் பயங்கரமான பேரழிவின் தாக்கம் குறித்து Trudeau கவலை தெரிவித்தார்.

ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என மீண்டும் வலியுறுத்திய கனடிய பிரதமர், அது இஸ்ரேலை ஆக்கிரமிக்கத் தேர்ந்தெடுத்துள்ளது என கூறினார்.

ஹமாஸ் பாலஸ்தீன மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என பிரதமர் Justin Trudeau குறிப்பிட்டார்.

Related posts

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

Lankathas Pathmanathan

COVID தளர்வு நடவடிக்கைகளை பிற்போடும் Alberta!

Gaya Raja

கனேடிய தூதரின் வெளியேற்றம் ஒரு பழிவாங்கல்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment