தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் சுகாதாரப் பாதுகாப்பு நிதி உதவியை ஏற்க முதல்வர்கள் முடிவு

பிரதமர் Justin Trudeauவின் 10 ஆண்டு கால சுகாதாரப் பாதுகாப்பு நிதி உதவியை ஏற்க கனடாவின் முதல்வர்கள் தீர்மானித்துள்ளனர்.

மத்திய அரசின் நிதி உதவியை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளதாக Manitoba முதல்வர் Heather Stefanson கூறினார்

திங்கட்கிழமை (13) நடைபெற்ற முதல்வர்கள் கலந்து கொண்ட மெய்நிகர் கூட்டத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசாங்கத்துடனான இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில் முதல்வர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

மாகாணங்கள், பிரதேசங்களுக்கு சுகாதார நிதியுதவியை அடுத்த 10 ஆண்டுகளில் 196.1 பில்லியனாக அதிகரிக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இதில் 46.2 பில்லியன் டொலர் புதிய நிதி உதவியும் அடங்குகிறது.

ஆனாலும் புதிய நிதி உதவி தமது தேவைகளை நிவர்த்தி செய்யவில்லை என்பது முதல்வர்களின் நிலைப்பாடு என முதல்வர் Heather Stefanson கூறினார்.

இந்த விடயம் குறித்து முதல்வர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

உண்மையை வெளிக்கொணர்வது பொது ஒழுங்கு அவசர ஆணைக்குழுவின் முக்கிய குறிக்கோள்

Lankathas Pathmanathan

Mexico உல்லாச விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஒரு கனடியர் மரணம் – இருவர் காயம்

Lankathas Pathmanathan

அரசு முறை இறுதிச் சடங்கில் NDP முன்னாள் தலைவர் நினைவு கூறப்பட்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment