தேசியம்
செய்திகள்

கனேடிய ஆயுதப் படைகளின் கலாச்சாரத்தை சீர் திருத்தும் புதிய திட்டம்

கனேடிய ஆயுதப் படைகளின் கலாச்சாரத்தை சீர் திருத்துவதற்கான புதிய திட்டம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் செவ்வாய்க்கிழமை (13) இந்த புதிய திட்டத்தை வெளியிட்டார்.

இன்று நாடாளுமன்றத்தில் தனது புதிய திட்டத்தை அமைச்சர் வெளியிட்டார்.

கனேடிய ஆயுதப் படைகளில் நிகழ்வது ஒரு பாலியல் துஷ்பிரயோக நெருக்கடி என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வழங்கிய பரிந்துரைகளை நிவர்த்தி செய்யுமாறு தேசிய பாதுகாப்புத் துறை, கனேடிய ஆயுதப் படைகளுக்கு தான் உத்தரவிட்டதாக ஆனந்த் கூறினார்.

கனேடிய ஆயுதப் படைகள் ஆட்சேர்ப்பு சவால்களை எதிர் கொள்வதாகவும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை எதிர்க்கும் வகையில் கனடாவில் வாகன ஊர்தி முற்றுகைப் போராட்டம்

Lankathas Pathmanathan

Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு ஆரம்பம்

சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்க வன்முறை கும்பல்களை பயன்படுத்தவில்லை: கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய மறுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment