தேசியம்
செய்திகள்

சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை இடைநிறுத்திய RCMP

சீன அரசாங்கத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை RCMP இடைநிறுத்துகிறது.

கடந்த வருடம் October மாதம் கையெழுத்திடப்பட்ட 550 ஆயிரம் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தம் இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம் வியாழக்கிழமை (08) இதனை உறுதிப்படுத்தியது.

இந்த ஒப்பந்தம் மூலம் பொருத்தப்பட்ட உபகரணங்களை RCMP பரிசோதனையிட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்தில் தேசிய பாதுகாப்பில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒப்பந்தங்கள் வழங்கப்படும் போது அவதானமாக செயல்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட ஒப்பந்தங்களை விசாரித்து வருவதாக தேசிய பாதுகாப்புத்துறை வியாழனன்று தெரிவித்தது.

சீனாவுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து பிரதமர் Justin Trudeau நேற்று அதிருப்தி தெரிவித்திருந்தார்.

Related posts

சொந்த செலவில் கட்டாயத் தனிமைப்படுத்தல் – கனடிய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள்!

Lankathas Pathmanathan

11 Toronto பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்?

Lankathas Pathmanathan

Liberal வேட்பாளர் நியமனத்தில் முன்னாள் Progressive Conservative தலைவரின் புதல்வன் ஆர்வம்?

Lankathas Pathmanathan

Leave a Comment