தேசியம்
செய்திகள்

மூன்றில் ஒரு கனேடியர்கள் பொது சுகாதார நடவடிக்கைகள் நீக்கப்பட்ட பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்!

கனேடிய குடும்பங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொது சுகாதார நடவடிக்கைகள் நீக்கப்பட்ட பின்னர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், தாங்களோ அல்லது தங்கள் வீட்டில் உள்ள ஒருவரோ பாதிக்கப்பட்டுள்ளதாக கனேடியர்களில் 37 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

August 1ஆம் திகதி முதல் August 3ஆம் திகதி வரை நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் நாடு முழுவதிலும் இருந்து 1,000 பேர் பங்கேற்றனர்.

இந்த கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் ஐம்பத்தைந்து சதவீதம் பேர், தொற்றின் பதில் நடவடிக்கையை மத்திய அரசாங்கம் கையாண்ட விதத்தில் திருப்தி அடைந்ததாக தெரிவித்தனர்.

Related posts

புதிய துப்பாக்கிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம்

Lankathas Pathmanathan

Jim Carrey ரஷ்யாவுக்குள் நுழைய தடை!

Lankathas Pathmanathan

பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று!

Gaya Raja

Leave a Comment