தேசியம்
செய்திகள்

உக்ரைன் போரில் பங்கேற்ற கனேடியர் மரணம்!

உக்ரைனில் அண்மையில் உயிரிழந்த கனேடியர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உக்ரைனின் ஆயுதப் படைகளுக்குள் ஒரு சிறப்பு நடவடிக்கை குழுவின் ஒரு பகுதியாக இருந்த “Beaver” என்ற புனைப்பெயர் கொண்ட தன்னார்வ போராளியாக இவர் அடையாளம் காணப்பட்டார்.

Quebec மாகாணத்தை சேர்ந்த 31 வயதான Emile-Antoine Roy-Sirois என்ற கனடியரான இவர் உக்ரைனில், ரஷ்யப் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டார்..

இவர் கடந்த வாரம் கிழக்கு உக்ரைனின் ரஷ்ய படையினரால் தாக்கப்பட்டபோது, மேலும் மூன்று வெளிநாட்டு போராளிகளுடன் மரணமடைந்ததாக அவர்களது பிரிவு தளபதி உறுதிப்படுத்தினார்.

உக்ரைனில் ஒரு கனடியர் இறந்ததை ஞாயிற்றுக்கிழமை (24) கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

தூதரக அதிகாரிகள் மரணமடைந்தவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர் என கூறிய அமைச்சு தனிநபர் உரிமை காரணமாக மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

Related posts

தலைநகர் போராட்டம் முற்றுகையாக மாறியுள்ளது: Ottawa நகர முதல்வர்

Lankathas Pathmanathan

உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா ஆராய்கிறது

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் மத்திய வங்கியின் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

Leave a Comment