தேசியம்
செய்திகள்

தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை கண்டித்தார் அமைச்சர் ஆனந்த்!

தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கண்டித்துள்ளார்.

Ottawaவில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள Unknown Solider என அறியப்படும் கல்லறை கொடிகளால் மூடப்பட்ட சம்பவத்தை இழிவுபடுத்துதல் என அமைச்சர் ஆனந்த் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தின் குறித்த ஒளிப்பதிவு காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக பொது சேவைகள், கொள்முதல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படுகிறது.

Related posts

கனடாவின் சட்ட நடைமுறைக்கு ஒத்துழைக்க இந்தியாவுக்கு இங்கிலாந்து அழைப்பு

Lankathas Pathmanathan

தமிழர் அங்காடி தொகுதியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான நகைகள் திருட்டு

Lankathas Pathmanathan

சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்” நூல் Toronto அறிமுகம்! 

Lankathas Pathmanathan

Leave a Comment