தேசியம்
செய்திகள்

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என கனடிய அரசாங்கத்திடம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

2008, 2009 ஆம் ஆண்டுகளில் இலங்கைத்தீவில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு காரணமான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஆனந்தசங்கரி கனடிய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கோரிக்கைகளை முன்வைக்கும் செய்தியாளர் சந்திப்பொன்றை புதன்கிழமை (20) மாலை Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தசங்கரி நடத்தினார்.

இலங்கையின் புதிய தலைவராக பிரதமரும் தற்காலிக ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்ய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ள நிலையில் இந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ராஜபக்ச சகோதரர்கள் பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் என அனந்தசங்கரி குற்றம் சாட்டினார்.

சர்வதேச சட்டத்தை மீறிய ராஜபக்ச சகோதரர்கள் மீது கனடா போன்ற நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கரி ஆனந்தசங்கரி தனது செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார, அரசியல் நிலைமைகள் குறித்து தனது கவலைகளை ஆனந்தசங்கரி செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.

Related posts

தொழிலாளர் அமைச்சருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan

Scarborough – Guildwood தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்

Lankathas Pathmanathan

Walmart கனடா தனது ஆறு கடைகளை மூடவுள்ளது

Gaya Raja

Leave a Comment