தேசியம்
செய்திகள்

தமிழர் பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Mississaugaவில் தமிழர் ஒருவர்  வாகனத்தால் மோதப்பட்டு பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த Decemberரில் Mississaugaவில் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் வாகனத்தால்  மோதப்பட்டார்.

பாதிக்கப்பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல், சம்பவ இடத்தில் நிறுத்தாமல் வாகன சாரதி தப்பி சென்றதாக கூறப்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுரேஷ் தர்மகுலசிங்கம், ஒரு வாரத்தின் பின்னர் மரணமடைந்தார்
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்த விசாரணையை அடுத்து 38 வயதான Luke Conklin என்பவர் மீது Toronto காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்
இவர் July மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் திட்டம்: நிதி அமைச்சர் Chrystia Freeland

Albertaவில் செவ்வாய் அறிவிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

Gaya Raja

வியாழக்கிழமை தமிழ் ஊடகங்களை சந்திக்கவுள்ள NDP தலைவி

Lankathas Pathmanathan

Leave a Comment